நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்னாமா ஊழியர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் குடிபோதையில் வாகனமோட்டியவர் கைது

கோலாலம்பூர்:

பெர்னாமா ஊழியர் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில்  குடிபோதையில் வாகனமோட்டியவரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் ஃபக்ரூடின் அப்துல் ஹமித் இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெர்னாமா டிவி ஒளிபரப்பு தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த சைபுடின் நசாரி விபத்துக்குள்ளானார்.

வேலை முடிந்து வீடு திரும்பும் போது நடந்த விபத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழக மலாயா மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பில் 25 வயதுடைய வாகனமோட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் குடிபோதையில் இருந்ததாக நம்பப்படுகிறது.

கைதான ஆடவர் ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டு போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset