நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இல்ஹாம் கட்டிடம் எம்.ஏ.சி.சியால் கைப்பற்றப்பட்டது; பழிவாங்கும் படலம் அல்ல: அன்வார் விளக்கம்

கோலலாம்பூர்: 

முன்னாள் நிதியமைச்சருக்குச் சொந்தமான இல்ஹாம் கட்டிடத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது என்பது அரசியல் பழிவாங்கும் படலம் அல்ல என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்தார். 

நீண்ட காலமாக இல்ஹாம் தரப்பும் தவறு செய்துள்ளனர். இதனால் தான் கடுமையான நடவடிக்கை எடுக்க முற்பட்டது என்று அன்வார் இப்ராஹிம் கூறினார். 

கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது அனைவரும் அறிவார்கள். இது எப்படி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மாறும் என்று செய்தியாளர்களிடம் அன்வார் வினவினார். 

முன்னதாக 60 மாடிகள் கொண்ட இல்ஹாம் கட்டிடத்தை கடந்தாண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைப்பற்றியது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset