நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KFA ஊழல் விவகாரத்தில் என்னை சிக்க வைக்க முயற்சி: முஹம்மத் சனூசி குற்றச்சாட்டு 

அலோர் ஸ்டார்: 

கெடா காற்பந்து சங்கத்தை உட்படுத்திய ஊழல் விவகாரத்தில் தம்மை சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முஹம்மத் சனூசி நோர் குற்றஞ்சாட்டினார். 

கடந்த 2020ஆம் ஆண்டு நிகழ்ந்த ஊழல் நடவடிக்கையின் காரணமாக  தற்போது பிடிப்பட்ட ஆடவன் என்பவன் வெறும் ஒப்புக்கு அந்த ஆடவனைக் கைது செய்துள்ளனர். 

ஆனால், உண்மையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குத் தாம் தான் முதல் நபராக இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணுகின்றனர். 

கெடா மாநிலத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எம்.ஏ.சி.சி கெடா மாநிலத்தின் மீது இவ்வாறு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சனூசி நோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இருப்பினும், கெடா காற்பந்து சங்கத்தின் ஊழல் விவகாரத்தில் எம்.ஏ.சி.சிக்கு ஒத்துழைக்க தாம் தயாராக உள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset