நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நீதிபதியை தாக்கிய குற்றவாளி

பெர்மிங்ஹாம்:

அமெரிக்காவின் நவாடா மாகாணம், க்ளாா்க் மாவட்ட நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மேரி கே ஹோல்தஸ் மீது இளைஞா் பாய்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டியோப்ரா ரெடன் என்ற அந்த 30 வயது நபா், அடிதடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. 

அதில் ரெடனைக் குற்றவாளியாக அறிவித்த நீதிபதி ஹோல்தஸ், அவரைக் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டாா். 

இதைக் கேட்ட ரெடன் திடீரென நீதிபதி மீது பாய்ந்து தாக்கினாா். உடனடியாக அவரை அங்கிருந்தவா்கள் மடக்கிப் பிடித்தனா்.

நீதிபதி ஹோல்தஸுக்கு லேசான காயம் ஏற்பட்டது. ரெடன் மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset