செய்திகள் உலகம்
ஜப்பான் நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்வு
தோக்கியோ:
ஜப்பானில் செவ்வாயன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவானது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்வுகள் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
தற்போது நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவம், தீயணைப்பு துறை, மோப்ப நாய்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இஷிகாவா மாநிலம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 72 மணி நேரம் மிக முக்கியமானதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் இடிபாடுகளில் சிக்கியவர்கள் 3 நாட்களுக்கு பின் உயிரோடு இருப்பது கடினமாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm