நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியா நாட்டின் எதிர்கட்சி தலைவரின் கழுத்தில் கத்திக்குத்து 

சியோல்: 

தென்கொரியா நாட்டின் எதிர்கட்சி தலைவரான லீ ஜெ ம்யுங் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவரின் கழுத்துப்பகுதியில் கத்திக்குத்து ஏற்பட்டது. 

லீ கத்திக்குத்துக்கு இலக்காகும் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 

செய்தியாளர்களும் பொதுமக்களும் திரண்டிருந்த நிலையில் லீ கத்திக்குத்துக்கு இலக்கானார் என்று புஸான் மாகாணத்தைச் சேர்ந்த போலீசார் தெரிவித்தனர். 

லீ தாக்கப்பட்ட பின்னணி, காரணங்கள் ஆகியவை துரிதமாக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் தரப்பு குறிப்பிட்டது. லீ உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

முன்னதாக, புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர் ஒருவரால் அவர் தாக்கப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset