நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைனில் ரஷியா 110 ஏவுகணைகளை வீசி தாக்குதல்

கீவ்:

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்கள் மீது ரஷியா 110 ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதலை நடத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மிக பயங்கரமான ஏவுகணைத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்தாகவும், 132 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலில் மகப்பேறு மருத்துவமனைப் பிரிவு, கல்விக் கூடங்கள், ஒரு வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள், இல்லங்கள், வர்த்தகக் கிடங்கு, வாகனம் நிறுத்துமிடங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset