செய்திகள் உலகம்
தென்சீன கடல் பகுதியில் இந்திய - பிலிப்பின்ஸ் கூட்டு போர் பயிற்சி: சீனா அதிருப்தி
பீஜிங்:
தென்சீன கடல் பகுதியில் இந்தியா - பிலிப்பின்ஸ் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டு போர் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால், பிலிப்பின்ஸ், வியத்நாம், மலேசியா, புரூனே, தைவான் ஆகிய நாடுகளும் அந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கோரி வருகின்றன.
அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பின்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை, சீன போர் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தது.
இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பின்ஸ் கடற்படையும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்த கூட்டு போர் பயிற்சி குறித்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான், இந்தியா - பிலிப்பின்ஸ் கூட்டு போர் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am