நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்சீன கடல் பகுதியில் இந்திய - பிலிப்பின்ஸ் கூட்டு போர் பயிற்சி: சீனா அதிருப்தி

பீஜிங்:

தென்சீன கடல் பகுதியில் இந்தியா - பிலிப்பின்ஸ் கடற்படைகள் மேற்கொண்ட கூட்டு போர் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால், பிலிப்பின்ஸ், வியத்நாம், மலேசியா, புரூனே, தைவான் ஆகிய நாடுகளும் அந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கோரி வருகின்றன.

அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பின்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை, சீன போர் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியடித்தது.

இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பின்ஸ் கடற்படையும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இந்த கூட்டு போர் பயிற்சி குறித்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான், இந்தியா - பிலிப்பின்ஸ் கூட்டு போர் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset