நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜனவரி 1 முதல் சிங்கப்பூரில் பொருள், சேவை வரி 9%: பெட்ரோல் நிலையங்கள் 1 மணி நேரம் மூடப்படும் 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூரில் உள்ள அனைத்து Esso, Shell நிலையங்களும் நாளை (31 டிசம்பர்) சுமார் ஒரு மணிநேரத்திற்குத் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து பொருள், சேவை வரி 9 விழுக்காடாக அதிகரிக்கின்றது.

மென்பொருளில் அந்த மாற்றத்தைப் பிரதிபலிக்க நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படும் என இரு நிறுவனங்களும் தங்கள் Facebook பக்கத்தில் தெரிவித்தன.

Esso நிலையங்கள் நாளை இரவு 11.30 மணி முதல் ஜனவரி 1, 2024 அதிகாலை 1.30 மணி வரை கட்டங்கட்டமாக மூடப்படும்.

Shell நிலையங்கள் நாளை இரவு 11.30 மணி முதல் ஜனவரி 1, 2024 நள்ளிரவு 12.20 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

இரு நிறுவனங்களும் சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டன.

ஆதாரம்: மீடியா கார்ப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset