நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஃபிரான்சில் தடுக்கப்பட்டிருந்த விமானம் இன்று மாலை மும்பை வந்து சேரும் 

மும்பை:

பெரும்பாலான இந்தியப் பயணிகளுடன் நிகராகுவா சென்று கொண்டிருந்த விமானம் பிரான்ஸில் மூன்று நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை புறப்பட்டு, மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் உள்ள விமான நிலையத்தில், இன்று மாலை விமானம் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணிகளிடம் நடத்திய விசாரணையை ரத்து செய்துவிட்டு, திங்கள்கிழமை காலை விமானம் புறப்பட நீதிபதிகள் அனுமதி அளித்திருந்தன.

விமானம் இன்று காலை புறப்பட்டுச் செல்லும் என்றும், ஆனால், எங்கே செல்லும் என்பது தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. 

அந்த விமானத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதால் விமானம் இந்தியா செல்லுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இன்று விமானம் மும்பை விமான நிலையம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset