செய்திகள் உலகம்
செக் குடியரசின் பல்கலைக்கழக மாணவர், 14 பேரைச் சுட்டுக்கொலை
ப்ராக்:
செக் குடியரசில் உள்ள சார்ல்ஸ் (Charles) பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் 14 பேரைச் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் செக் குடியரசில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக அது கருதப்படுகிறது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் சிலர் அந்த மாணவரின் சகாக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
நாளை (23 டிசம்பர்) தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.
அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
காணாமற்போன மாணவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு முன்பாக அந்த மாணவர் தமது தந்தையைச் சுட்டுக்கொன்றதாகக் காவல்துறை நம்புகிறது.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த நகரில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. ஆயுதங்கள் ஏந்திய காவல்துறை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் 14ஆம் நூற்றாண்டின் சார்ல்ஸ் பாலம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am