நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாட்டுக்கு நன்கொடை: ராகுல் காந்தி நிதியளிப்பு

புது டெல்லி:

காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ள "நாட்டுக்கு நன்கொடை' நிதி திரட்டும் திட்டத்துக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிதியளித்தார்.

நாட்டுக்கு நன்கொடை என்ற பெயரில் இணையவழியில் பொதுமக்களிடம் காங்கிரஸ் பொது நிதி திரட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கிவைத்து ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினார்.

இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நன்கொடை வழங்கினார். அவர் நன்கொடை அளித்த தொகை குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்திலிருந்து அதிகபட்ச நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கடுத்த இடங்களில் ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset