செய்திகள் இந்தியா
நாட்டுக்கு நன்கொடை: ராகுல் காந்தி நிதியளிப்பு
புது டெல்லி:
காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ள "நாட்டுக்கு நன்கொடை' நிதி திரட்டும் திட்டத்துக்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிதியளித்தார்.
நாட்டுக்கு நன்கொடை என்ற பெயரில் இணையவழியில் பொதுமக்களிடம் காங்கிரஸ் பொது நிதி திரட்டி வருகிறது. இந்தத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கிவைத்து ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினார்.
இந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை நன்கொடை வழங்கினார். அவர் நன்கொடை அளித்த தொகை குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்திலிருந்து அதிகபட்ச நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கடுத்த இடங்களில் ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநிலங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am