நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கனமழையால் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு 

மதுரை:

கனமழை காரணமாக தென் தமிழக ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டு, மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து இயக்கப்படும் 9 ரயில்களின் விவரம்:

1. 22667 நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயில்

2. 12634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்

3. 22658 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரயில்

4. 17236 நாகர்கோவில் - எஸ்எம்விடி பெங்களூரு விரைவு ரயில்

5. 11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில்

6. 16235 தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்

7. 20606 திருச்செந்தூர் - மைசூர் அதிவிரைவு ரயில்

8. 12632 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் அதிவிரைவு ரயில்

9. 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் விரைவு ரயில்

Image

முன்னதாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 13 ரயில்கள் மதுரை, திண்டுக்கல், திருவனந்தபுரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset