நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் போர் தொடரும்: புதின்

மாஸ்கோ:

சுமார் 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உக்ரைன் போர் தொடரும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார்.

ஆண்டு இறுதியில் புதின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உக்ரைனில் 6.17 லட்சம் ரஷிய ராணுவ வீரர்கள் செயலாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பக்கபலமாகப் போரிட, சுமார் 2.44 லட்சம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் தொடர்பான நமது இலக்குகள் அனைத்தும் எட்டப்பட்டவுடன் அங்கு அமைதி திரும்பும். அதற்கான உடன்பாட்டை உக்ரைன் மேற்கொள்ளும்வரை போர் தொடரும்.

உக்ரைன் போரில் ரஷியா பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகிறது. இறுதி வெற்றியும் நம்முடையதாகத்தான் இருக்கும்.

உக்ரைனின் எதிர்த் தாக்குதல் நடவடிக்கை மூலம் அந்த நாட்டுக்கு இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset