
செய்திகள் இந்தியா
பாறையில் கசிந்த நீரை பருகி உயிர்வாழ்ந்த உத்தரகண்ட் தொழிலாளர்கள்: எலி வளை முறையில் துளையிட்டு காப்பாற்றிய முஹம்மது குறைஷி அணி
புது டெல்லி:
உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியபோது பாறைகளில் கசிந்த நீர்த் துளிகளைப் பருகி ஆரம்ப நாள்களில் உயிர் பிழைத்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா சுரங்கப் பாதையில் நவம்பர் 12ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
17 நாள் மரணப் போராட்ட அனுபவங்களை தப்பிய ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளி அனில் பேடியா தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்டதும் நாங்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் புதைந்துவிடுவோம் என்று எண்ணினோம். முதல் இரண்டு நாள்களில் நாங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம்.
70 மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகள் எங்களைத் தொடர்புகொண்ட பிறகே, விரக்தியை மறந்து உயிர் வாழும் நம்பிக்கை பிறந்தது. தாகம் தீர்க்க பாறைகளிலிருந்து கசிந்த நீர்த் துளிகளைப் பருகியும், அரிசிப் பொரியை சாப்பிட்டும் உயிர் பிழைத்தோம்.
வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், தண்ணீர் பாட்டில்களுடன் சாதம், பருப்பு மற்றும் சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகள் கிடைத்தன. இறுதியாக, கடவுள் எங்களுக்குச் செவிசாய்த்தார் என்றார்.
எலி வளை முறையில் துளையிட்டு 41 பேரை காப்பாற்றிய குறித்து சுரங்கப் பணியாளர் முஹம்மது குரேஷி கூறுகையில், இடிபாடுகளின் கடைசிப் பகுதியை நாங்கள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, தொழிலாளர்கள் எங்களின் குரலைக் கேட்க முடிந்தது. துளையிடும் பணிகள் முடிந்ததும், என்னை தோளில் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட பணம் எதுவும் பெறமாட்டோம் என முன்னரே தெரிவித்துவிட்டோம். இதுபோன்ற வரலாற்று மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am