செய்திகள் இந்தியா
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 8 பேரின் மரண தண்டனை: மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார்
புது டெல்லி:
கத்தாரில் தங்கி இருந்து இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சியையும் பிற சேவைகளையும் அளித்து வரும் அல் தாரா என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள், அந்த நாட்டின் கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.
இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு குறித்து அறிந்த இந்தியா அதிர்ச்சியை வெளிப்படுத்தியது.
இந்தியர்களின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை கத்தார் நீதித்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm