நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறப்பு தகவல் தொழில்நுட்ப பூங்கா: சந்திரசேகர் ராவ்

ஹைதராபாத்:

தெலங்கானா பேரவைத் தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதிக்கு மீண்டும் வெற்றி பெற்றால் முஸ்லிம் இளைஞர்களுக்கு என சிறப்பு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

தெலங்கானாவின்  வருகிற 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  முதல்வர் சந்திரசேகர் ராவ்  பிரசாரத்தில் பேசுகையில்,

தெலங்கானா மாநிலம் சட்ட ஒழுங்கு பிரச்னையின்றி அமைதி பூங்காவாக திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மையினர் நலனுக்காக அரசு சார்பில் ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் எங்கள் ஆட்சி அமைந்தால் ஹைதராபாத் அருகே இஸ்லாமிய இளைஞர்களுக்கென சிறப்பு ஐடி பூங்கா தொடங்கப்படும் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset