நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

4 லட்சம் ஆப்கன் அகதிகளை அனுப்பியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: 

தங்கள் நாட்டில் தங்கியிருந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் அகதிகளை  அவர்களது சொந்த நாட்டுக்கு பாகிஸ்தான் அனுப்பியது.

இதுகுறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகையில், சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் ஆப்கன் நாட்டவர்கள் அனைவரும் வெளியேற்றப்படும் வரை இதற்கான நடவடிக்கை தொடரும் என்றனர்.

ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்திருந்தபோது அங்கிருந்து ஏராளமான அகதிகள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர்.

பின்னர் அந்நாட்டு  அகதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்து வந்தது.

எனினும், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டு அகதிகள்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில் தங்கள் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள அனைத்து அகதிகளும் அக்.31க்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. தற்போது 4 லட்சம் பேரை வெளியேற்றி உள்ளது.

ஆவணங்களின்றி பாகிஸ்தானில் சுமார் 17 லட்சம் ஆப்கானியர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset