நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து: உ.பி.யில் ஒருவர் கைது

புது டெல்லி:

இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையிலான போர் குறித்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக, உத்தர பிரதேசத்தில் 2 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஒருவரை  கைது செய்தனர்.

ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீப் சௌதரி, சுஹைல் அன்சாரி ஆகியோர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சமூக ஊடக கணக்குகளில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

அந்தப் பதிவுகள், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக கூறி, மௌதாஹா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார்  அன்சாரியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சௌதரியை தேடி வருகின்றனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset