நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருமணங்களால் ஒத்திவைக்கப்பட்ட இந்திய தேர்தல்

புது டெல்லி:  

நவம்பர் 23ஆம் தேதி ராஜஸ்தானில் அதிகமான திருமண நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதால் அந்த மாநில பேரவைத் தேர்தல் நவம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிஸோராம் மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன.

இதில், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.

அன்று சுப தினம் என்பதால், அந்த மாநிலத்தில் 50,000க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள்  கோரிக்கை வைத்தன.

வாக்குப்பதிவும் குறைந்துவிட வாய்ப்புள்ளது என்று கூறி தேர்தல் தேதி நவம்பர் 25க்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset