
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவரும் சர்ச்சைக்குரிய பேச்சாளருமான ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காளையார்கோவிலில் செப்.19-ம் தேதி இந்து முன்னணி, பாஜக சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோரை அவதூறாகவும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளர் ஆரோக்கியசாமி அளித்த புகாரின்பேரில் காளையார்கோவில் போலீஸார் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்புகூட ஹைகோர்ட் என் மயிருக்கு சமானம் என்று கூறி உயர்நீதிமன்றத்தை ஹெச் ராஜா கேவலமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 7:16 pm
மிக்ஜாம் புயல் | மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை
December 2, 2023, 10:26 pm
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை 144 ரயில்கள் ரத்து
December 2, 2023, 5:13 pm
இந்தியாவிலேயே அதிக நன்கொடை; அதானியை விட 6 மடங்கு அதிகம் - வள்ளல் சிவ நாடார்
December 2, 2023, 2:37 pm
தமிழக ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
December 1, 2023, 9:50 pm
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; தொடைப் புண் நடையில் காட்டுகிறது: ஜவாஹிருல்லா
November 30, 2023, 8:06 am
சென்னையில் கொட்டும் கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
November 28, 2023, 6:58 pm