செய்திகள் இந்தியா
செய்தித் தொலைக்காட்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்: உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
இந்திய செய்தித் தொலைக்காட்சிகளுக்கான சுய ஒழுங்கு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதற்காக புதிய கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கத்துக்கு NBDAவுக்கு உத்தரவிட்டது.
ஹிந்தி நடிகர் சுசாந்த் சிங் மரணம் தொடர்பாக சில செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்ட ஊடக விசாரணைச் செய்திகள் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
மும்பை உயர்நீதிமன்றக் கருத்துகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்பிடிஏ வழக்குத் தொடுத்தது. இந்த மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இது ஊடகங்களை தணிக்கை செய்ய வழிவகுக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு, சுய ஒழுங்குமுறை நெறிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். புதிய நெறிமுறைகள் தாக்கல் செய்ய NBDA வுக்கு நான்கு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm