நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நாடாளுமன்றத்துக்கு வெளியே மட்டும் பிரதமர் மோடி அதிகமாக பேசுகிறார்: காங்கிரஸ்

புது டெல்லி:

நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை அவர் தவிர்த்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அதிகம் பேசுகிறார் என்று காங்கிரஸ் குறை கூறியது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் வன்முறை, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்றார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, அரசியல் சாசனத்துக்கு அடித்தளம் அமைத்தவர். அதனடிப்படையில்தான், நாடாளுமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவரான ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு தனது அமைச்சரவையில் இடமளித்தார்.

ஆனால், நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி அதிகம் பேசுகிறார். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை அவர் தவிர்த்துவிடுகிறார்.

எப்போதாவது அவைக்கு வரும் பிரதமர், சாதாரண உரைகளைத் தவிர வேறெதுவும் பேசுவதில்லை என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset