நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று தொடக்கம்: முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

புது டெல்லி:

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

முதல் கூட்டத் தொடர் என்பதால் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத் தொடரில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தில்லியில் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகே புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28ம் தேதி திறந்துவைத்தார்.  

எனினும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நாளில் புதிய நாடாளுமன்றத்தில் முதலாவது கூட்டத்தொடரும் தொடங்கவுள்ளது.

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் திங்கள்கிழமை விவாதிக்கப்பட்டது.

இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிருக்கு நாடாளுமன்றம், மாநிலங்களவையில் 33சதவீத இடஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காலமாக இந்த மசோதா நிலுவையில் உள்ளதால் இதை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset