நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் அதிபராகத் தர்மன் சண்முகரத்னம் நாளை பதவியேற்கிறார்

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் செப்டமர் 1-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 

இதை தொடர்ந்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக அவர் நாளை வியாழக்கிமை பதவியேற்கிறார். 

தற்போது பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

தர்மன் சண்முகரத்னம் இதற்கு முன், சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிமந்திரி, கல்வி மந்திரி, துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset