நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை

பெய்ஜிங் :

சீனாவில் ஐபோனைப் பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகின்றது. 

இந்நிலையில் வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தைக் குறைத்து இணையப் பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவு செய்தது. 

அதன்படி ஐபோன் மற்றும் வெளிநாட்டு முத்திரை உள்ள கருவிகளை அரசு ஊழியர்கள் தங்களது பணியின்போது பயன்படுத்தக் கூடாது என சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

சீனாவின் டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையின் எதிரொலி எனவும் இது கருதப்படுகின்றது. 

எனினும் இது குறித்து சீன அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க விரும்பவில்லை என அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset