செய்திகள் உலகம்
அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது
நியூயார்க் :
உலகம் முழுவதும் எழுத்தறிவின்மையை வேருடன் அகற்றும் நோக்கத்தில் யுனெஸ்கோவின் ஐ.நா கல்வி அறிவியல் கலாச்சார அமைப்பு சார்பில் அனைத்துலக எழுத்தறிவு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
1967-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி முதல் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
உலகளவில் எழுத்தறிவு தினம் இன்னாளில் கொண்டாடுவதற்கு வரலாறும் உண்டு.
மனிதக் குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரியத் தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன.
இதையடுத்து, 1965-ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூகப் பொருளாதார பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
உலகிலிருந்து எழுத்தறிவின்மையை ஒழிக்க தேவையான அனைத்துப் பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.
இதையடுத்து, 1966-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி நடத்திய யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழுவில், எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8-ஆம் தேதியை அனைத்துக எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 1967-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி அனைத்துலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆண்டுகள் சுழல எழுத்தறிவின் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொண்டு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். எழுத்தறிவில்லா சமூகத்தை உருவாக்க ஒரு மொழியைப் படிக்கவும், எழுதவும் தெரிவதற்கான விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து வருகின்றனர். இதன்மூலம், எழுத்தறிவில் பின்னோக்கி இருந்த பல நாடுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
உலக நாடுகள் எடுத்த முயற்சிகளால் அனைத்துல அளவில் எழுத்தறிவு விழுக்காடு அதிகரித்துள்ளது. குறைந்தபட்சம் 15 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 86.3% ஆகவும், 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் கல்வியறிவு விகிதம் 90% ஆகவும் உள்ளது.
அதே சமயம் உலகளவில் பெண்கள் 82.7% ஆக சற்று பின்தங்கிய நிலையில் உள்ளனர். இருப்பினும், நாட்டிற்கு நாடு பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am