நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் - 3 இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்றுச் சாதனை

ஸ்ரீஹரிகோட்டா :

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தடம் பதித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இந்திய நேரம் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது.

அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி மாபெரும்  சாதனை படைத்துள்ளது. 

பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னா் நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தைப் பல்வேறு கட்டங்களாகப் படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. 

இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது. 

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டது. 

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

இதனிடையே, இஸ்ரோவின் சாதனையைப் பாராட்டி பிரதமர் மோடி தமது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் உட்பட ஒவ்வொரு இந்தியரும் சந்திரயான்-3 இன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset