நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சந்திரயான்-3 : விக்ரம் லேண்டர் நாளை மாலை தரையிறங்குகிறது

பெங்களூர்: 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது. 

நிலவின் தென் துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தைச் சந்திரயான் 1 கண்டுபிடித்த பின்னர் நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இந்தியாவும் சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவத்தை ஆராய திட்டமிட்டது. ஆனால் இதன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்காமல் தோல்வி அடைந்தது. 

இந்த நிலையில் சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். 

இதனையடுத்து கடந்த 17-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது வரும் 23-ஆம் தேதி நிலவில் தரை இறங்க இருக்கிறது. 

அதாவது 23-ஆம் தேதி மாலை 5.45-க்கு பதிலாக 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவை தொடும்.

-அஸ்வினி செந்தமாரை  

தொடர்புடைய செய்திகள்

+ - reset