செய்திகள் இந்தியா
சந்திரயான்-3 : விக்ரம் லேண்டர் நாளை மாலை தரையிறங்குகிறது
பெங்களூர்:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரையிறங்கவுள்ளது.
நிலவின் தென் துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தைச் சந்திரயான் 1 கண்டுபிடித்த பின்னர் நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்தியாவும் சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பி நிலவின் தென் துருவத்தை ஆராய திட்டமிட்டது. ஆனால் இதன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்காமல் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையைக் கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கிறது.
கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 17-ஆம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது வரும் 23-ஆம் தேதி நிலவில் தரை இறங்க இருக்கிறது.
அதாவது 23-ஆம் தேதி மாலை 5.45-க்கு பதிலாக 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவை தொடும்.
-அஸ்வினி செந்தமாரை
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm