நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உ.பி. அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் கேள்வி எழுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

லக்னோ:

உத்தர பிரதேச அரசுக்கு எதிராக  செய்திகள் வெளியிட்டால் அதுகுறித்து ஊடக நிறுவனத்திடம் விளக்கம் கோர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைச் செயலர் சஞ்சய் பிரசாத் பிறப்பித்த உத்தரவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அல்லது மாவட்ட நிர்வாகத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான செய்திகள் வெளியிடப்பட்டாலோ, அதுகுறித்து சம்பந்தப்பட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் மேலாளரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிகப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset