நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அரசு துறைகளின் முக்கிய பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்: லடாக்கிற்கு பைக்கில் சென்ற ராகுல் பேச்சு

புது டெல்லி:

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள், அரசு  துறைகளின் முக்கிய பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்பினர் நியமனம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

லடாக்கின் பாங்காங் டசோ ஏரி பகுதிக்கு ராகுல் காந்தி பைக்கில் சனிக்கிழமை பயணம் மேற்கொண்டார். பைக் பயண புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ராகுல் காந்தி, "உலகின் மிக அழகான பகுதிகளில் ஒன்று என எனது தந்தை அடிக்கடி கூறும் பாங்காங் ஏரிக்கு சென்றுகொண்டிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, லடாக்கின் லே பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்ராகுல் காந்தி பேசுகையில், இளைஞர்களுடனான கலந்துரையாடலின்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

மக்களவை, மாநிலங்களவை, திட்டக் குழு, பாதுகாப்புப் படைகள், பிற துறைகள் மூலமாக நாம் உருவாக்கிய அரசியல் சாசனமும் அதன் இலக்குகளும் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன.

முக்கியத்துவம்வாய்ந்த இத்தகைய நிறுவனங்களின் முக்கியப் பொறுப்புகளில் தங்களின் சொந்த நிர்வாகிகளை ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்புகள் நியமனம் செய்து வருகின்றன.

ஏதாவதொரு அமைச்சகத்துக்குச் சென்று முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன கேள்வி எழுப்பும்போது, அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி இருப்பது தெரிய வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset