நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லேண்டரை வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர்: மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

புதுடெல்லி :

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்கனவே சந்திரயான் 2-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டில் சந்திரனுக்குச் செலுத்தியிருந்தது.

அப்போது லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதியதால் தகவல் தொடர்பு கிடைக்காமல், திட்டம் தோல்வியில் முடிந்தது. 

இதனையடுத்துத் தற்போது சந்திராயான் 3-யை இந்தியா செலுத்தியுள்ளது. லேண்டர் நாளை மறுதினம் நிலவில் இறங்க இருக்கிறது. இதற்கிடையே சந்திரயான்-2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்குக் கூடுதலாக ஒரு வழி கிடைத்துள்ளது.

-அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset