நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கள்ளக் காதலுக்கு எல்லைப் பாதுகாப்பு படை ரகசியங்களைத் தந்த பிஎஸ்எப் ஊழியர் கைது

கட்ச்:

குஜராத்தின் கட்ச் பகுதியில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் நிலேஷ் குமார் என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக அதிதி என்ற பெண் அவருக்கு அறிமுகமானார்.
 
அந்தப் பெண் மீது காதல் வயப்பட்ட நிலேஷ், எல்லை பாதுகாப்புப் படை குறித்த பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி உள்ளார்.

இதற்கு பிரதிபலனாக அந்த பெண் தனது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பியிருக்கிறார்.

அதோடு நிலேஷ் அனுப்பும் ஒவ்வொரு தகவல், புகைப்படம், வீடியோக்களுக்கு பணத்தையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்து, பிஎஸ்எப் ஊழியர் நிலேஷை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset