செய்திகள் மலேசியா
உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கேகே நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ சாய் அறிவிப்பு
புத்ரா ஜெயா:
உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதை கேகே சூப்பர் மார்கெட் இலக்கு கொண்டிருப்பதாக அதன் தோற்றுநர் மற்றும் தலைமை நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள கே.கே சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்ய 80 விழுக்காடு மலேசியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
20 விழுக்காடு மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மலேசிய தொழிலாளர்களுக்கு அதிக அளவில் தொழில் திறன் பயிற்சிகளை வழங்க நாங்கள் முன் வந்திருக்கிறோம்.
ஆகவே கே.கே. சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை மலேசியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சர் வி. சிவக்குமாரை இன்று மரியாதை நிமித்தமாக டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய், கேகே சூப்பர் மார்க்கெட் வர்த்தக தலைமை நிர்வாகி ஸ்டீவன் லீ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகமான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மனிதவள அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கேகே சூப்பர் மார்க்கெட் நிறுவனம் துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 10:17 am
சுங்கை பெசியில் பரபரப்பு: மாயமான மாற்றுத்திறனாளி இளைஞர் நலமுடன் மீட்பு
March 31, 2026, 10:14 am
மலேசிய வாகனங்களில் எரிபொருள் திருட்டா?: தாய்லாந்து சுற்றுலாத்துறை விளக்கம்
March 31, 2026, 10:01 am
கூலிமில் ஊடகவியலாளர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது: சார்லஸ்
March 31, 2026, 9:53 am
31 குற்றப் பதிவுகளை கொண்ட ஆடவர் கேஎல்ஐஏவில் துரத்தி பிடிக்கப்பட்டார்: போலிஸ்
March 31, 2026, 9:36 am
2025ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்படும்
March 31, 2026, 9:13 am
தம்பியைச் சுட்டு கொன்ற அண்ணன் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்
March 30, 2026, 11:45 pm
எனது பதவி விலகல் செய்தி; உண்மைக்கு புறம்பானது: நூருல் இசா
March 30, 2026, 9:15 pm
