 
 செய்திகள் மலேசியா
உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கேகே நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ சாய் அறிவிப்பு
புத்ரா ஜெயா:
உள்ளூர் தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதை கேகே சூப்பர் மார்கெட் இலக்கு கொண்டிருப்பதாக அதன் தோற்றுநர் மற்றும் தலைமை நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள கே.கே சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்ய 80 விழுக்காடு மலேசியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
20 விழுக்காடு மட்டுமே அந்நியத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
மலேசிய தொழிலாளர்களுக்கு அதிக அளவில் தொழில் திறன் பயிற்சிகளை வழங்க நாங்கள் முன் வந்திருக்கிறோம்.
ஆகவே கே.கே. சூப்பர் மார்க்கெட்டுகளில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை மலேசியர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மனிதவள அமைச்சர் வி. சிவக்குமாரை இன்று மரியாதை நிமித்தமாக டத்தோஸ்ரீ டாக்டர் கேகே சாய், கேகே சூப்பர் மார்க்கெட் வர்த்தக தலைமை நிர்வாகி ஸ்டீவன் லீ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகமான உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த மனிதவள அமைச்சு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கேகே சூப்பர் மார்க்கெட் நிறுவனம் துணை நிற்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் கே.கே. சாய் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 