செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி அருகே சென்னை ரயிலைக் கவிழ்க்க சதி
திருச்சி:
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரயிலை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரெயில் வந்துவிட்டது.
அப்போது தான், தண்டவாளத்தில் லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது.
டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரயில் என்ஜின் அவற்றின் மீது மோதி சிறிது தூரத்தில் சென்று நின்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
அறிவியல் அறிஞர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் பாடத் திட்ட வடிவமைப்புக் குழு: தமிழக அரசு உத்தரவு
June 29, 2026, 6:07 pm
சோபா மாடல் ஆட்சியில் வாஷிங் மெஷின் அரசியல்: உதயநிதி
June 28, 2026, 7:45 pm
தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம்
June 28, 2026, 3:57 pm
இயக்குநர் பாக்யராஜின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம்
June 28, 2026, 11:16 am
மதிமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக மறுப்பு: வைகோ அதிர்ச்சி
June 27, 2026, 2:29 pm
