செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி அருகே சென்னை ரயிலைக் கவிழ்க்க சதி
திருச்சி:
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரயிலை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரெயில் வந்துவிட்டது.
அப்போது தான், தண்டவாளத்தில் லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது.
டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரயில் என்ஜின் அவற்றின் மீது மோதி சிறிது தூரத்தில் சென்று நின்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 12:31 pm
பெங்களூர், ராமநாதபுரம் நகரங்களுக்கு சென்னையில் இருந்து பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்
October 20, 2024, 6:52 am
ஒன்றிய அரசின் 33% வரி காரணமாக தமிழகத்தில் தீபாவளி இனிப்புப் பலகார விலைகள் கடும் உயர்வு
October 19, 2024, 4:52 pm
தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
October 16, 2024, 5:44 pm
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-இல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
October 15, 2024, 4:06 pm
சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன
October 13, 2024, 5:00 pm
கொட்டி தீர்த்த மழையால் நிலைகுத்தியது மதுரை
October 13, 2024, 1:47 pm