நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு அதிகம்; முகக்கவசம் அணிய மக்களுக்கு அறிவுறுத்தல் 

சிங்கப்பூர்: 

EL-NINO பருவநிலை மாற்றம் தொடர்பாக தென்கிழக்காசிய நாடுகளில் கடுமையான வெயில் தாக்கி வரும் சூழலில் புகைமூட்டமும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. 

இந்நிலையில், மலேசியாவின் அண்டை நாடான சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்படும் என்று அந்நாட்டின் வானிலை மையம் தகவல் வெளியிட்டிருப்பதால் சிங்கப்பூர் நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய தயாராக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

புகைமூட்டம் ஏற்படுவதால் கடுமையான வெப்பமும் வெளிப்புற நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. 

மலேசியா-இந்தோனேசியாவில் ஏற்படும் புகைமூட்டம் காரணமாக அது சிங்கப்பூர் நாட்டிலும் சூழ்ந்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset