![image](https://imgs.nambikkai.com.my/drugs-bfc31.jpg)
செய்திகள் மலேசியா
21 கிலோ போதைப்பொருள் விநியோகம்: மரணத் தண்டனையை எதிர்நோக்கும் 2 இந்திய ஆடவர்கள்
ஈப்போ:
21 கிலோகிராம் எடை ஹெராயின் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆர்.ஆர்.பிரபாகரன் (39) எஸ்.ஜெனேசன் ஆகிய இருவரும், மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் மொழிபெயர்ப்பாளரால் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மே 16 -ஆம் தேதி , இரவு 9 மணிக்கு ஈப்போ, ஜாலான் ஜெலாப்பாங் பாயு 6, புன்சாக் ஜெலாப்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் 21,069 கிராம் எடையுள்ள ஹெராயின் வகை போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 15 கசையடிகள் வழங்கப்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞரான ஷாஹிரா அஜாஹார் இந்த வழக்கை கையாண்டார். மேலும் கணேசன் தரப்பில் வழக்கறிஞர் டாயாங் நோர் எமிலியா அஸ்மான் ஷா ஆஜரானார்.
வேதியியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதால் இந்த வழக்கு ஜூலை 26ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
முன்னதாக, மே 18-ஆம் தேதி போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மாடி வீட்டில் பேராக் காவல் படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்தியச் சோதனையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் நடந்த சோதனையில், பிரபாகரனும் அவரது 38 வயது மனைவியும் வைத்திருந்த 210,122.80 ரிங்கிட் மதிப்பிலான 21,676 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 27, 2024, 4:03 pm
டிக் டாக்கால் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கிறது: மஇகா மகளிர் அணி வேதனை
July 27, 2024, 2:09 pm
போலீஸ் சோதனையில் தப்பிச் செல்ல முயன்ற தம்பதியர் கைது
July 27, 2024, 1:43 pm
ஜொகூரில் அடுத்தாண்டு பைலட் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: ஓன் ஹஃபிஸ் காசி
July 27, 2024, 1:03 pm
உணர்வு அரசியலைச் சமாளித்து, சேவையை முன்னெடுங்கள்: டத்தோஶ்ரீ ஜாஹித்
July 27, 2024, 12:49 pm
முன்னாள் அமைச்சர் Siti Zaharah Sulaiman-னின் குடும்பத்திற்கு ஜாஹித் இரங்கல்
July 27, 2024, 11:05 am
பத்தாண்டில் 1,600 போலிஸ் அதிகாரிகள் வேலையிலிருந்து நீக்கம்
July 27, 2024, 10:30 am