செய்திகள் மலேசியா
21 கிலோ போதைப்பொருள் விநியோகம்: மரணத் தண்டனையை எதிர்நோக்கும் 2 இந்திய ஆடவர்கள்
ஈப்போ:
21 கிலோகிராம் எடை ஹெராயின் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இருவர் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆர்.ஆர்.பிரபாகரன் (39) எஸ்.ஜெனேசன் ஆகிய இருவரும், மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் மொழிபெயர்ப்பாளரால் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மே 16 -ஆம் தேதி , இரவு 9 மணிக்கு ஈப்போ, ஜாலான் ஜெலாப்பாங் பாயு 6, புன்சாக் ஜெலாப்பாங்கில் உள்ள ஒரு வீட்டில் 21,069 கிராம் எடையுள்ள ஹெராயின் வகை போதைப் பொருள் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் 39B (2) இன் கீழ் தண்டிக்கப்படலாம்.
இந்தக் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால் ஆயுள் தண்டனையுடன் குறைந்தது 15 கசையடிகள் வழங்கப்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞரான ஷாஹிரா அஜாஹார் இந்த வழக்கை கையாண்டார். மேலும் கணேசன் தரப்பில் வழக்கறிஞர் டாயாங் நோர் எமிலியா அஸ்மான் ஷா ஆஜரானார்.
வேதியியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதால் இந்த வழக்கு ஜூலை 26ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.
முன்னதாக, மே 18-ஆம் தேதி போதைப்பொருள் பதப்படுத்தும் ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மாடி வீட்டில் பேராக் காவல் படைத் தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்தியச் சோதனையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் நடந்த சோதனையில், பிரபாகரனும் அவரது 38 வயது மனைவியும் வைத்திருந்த 210,122.80 ரிங்கிட் மதிப்பிலான 21,676 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 10:11 pm
பூடி 95 திட்டத்தில் மாற்றம் தற்காலிகமானது; மக்கள் புரிந்துகொள்வார்கள்: பிரதமர் நம்பிக்கை
March 26, 2026, 10:08 pm
பத்துமலையில் தேசிய ஆலய கருத்தரங்கு; டான்ஸ்ரீ நடராஜா தொடக்கி வைப்பார்: டத்தோ சிவக்குமார்
March 26, 2026, 10:04 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறைக்கு தனியார் துறை முன்னுரிமை வழங்க வேண்டும்: பிரதமர் அன்வார்
March 26, 2026, 6:56 pm
பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 பெட்ரோல் அளவு 200 லிட்டராக குறைக்கப்படும்: பிரதமர்
March 26, 2026, 5:52 pm
டீசல் விலை உயர்வு: 5,000 பேருந்து தொழிலதிபர்கள் பாதிப்பு
March 26, 2026, 5:35 pm
தென்கிழக்கு ஆசிய தொடக்கக் கற்றல் ஆய்வு; எழுத்துத் திறனில் மலேசியா முதலிடம்: கல்வியமைச்சு
March 26, 2026, 5:34 pm
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்யவில்லை: ஷாபி
March 26, 2026, 5:34 pm
சீபீல்டு ஆலயம் தொடர்பில் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட வேண்டாம்: பாப்பாராயுடு
March 26, 2026, 5:02 pm
