செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீ குவான் யூவுக்கு தமிழகத்தில் சிலை: மு. க. ஸ்டாலின்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் வந்திருக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தின.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருக்கும் முதல் அதிகாரத்துவப் பயணம் இது.
இந்த நிகழ்ச்சியை 60 தமிழ் அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ளன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சமய நல்லிணக்கம், பல் இன ஒற்றுமை, மொழிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குச் சிங்கப்பூர் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக் காட்டினார்.
சிங்கப்பூரும் தமிழ்நாடும் இணைந்து மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நாளடைவில் மக்களையும் தமிழையும் வளர்ப்பதற்கு உதவும்.
இரு தரப்பிலும் உள்ள மக்கள் வளம்பெறவேண்டும். தமிழும் வளரவேண்டும். அந்த வகையில் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவமுடியும் என்று எண்ணிப் பயனடையலாம் என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று திரு. ஸ்டாலின் தெரிவித்தார்.
நினைவுச்சின்னமும் காலஞ்சென்ற லீயின் பெயரில் நூலகமும் மன்னார்குடியில் அமையும் என்றார் அவர்.
சன்டெக் சிட்டி மாநாட்டு நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சுமார் ஈராயிரம் பேர் கலந்துகொண்டுள்ளனர்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
May 17, 2026, 10:42 pm
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
