நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: 

தமிழக அரசு சார்பில் கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது படத்துக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளையொட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலை தமிழக அரசு சார்பில் நேற்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு அடியில் அவரது உருவ படத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கண்ணதாசனின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

கவியரசு கண்ணதாசனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், "மூப்பிலாத் தேன்தமிழில் இறவாக் கவிதைகள் படைத்திட்ட கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்! காலத்தால் வெல்ல முடியாத மாமேதைகள் தங்கள் கலை படைப்புகளால் உலகம் உள்ளவரை நம் உள்ளத்தில் நிலைத்து நிற்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset