நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிறுமியை கொன்ற சிறுத்தை வனத்துறையின் கூண்டில் சிக்கியது

வால்பாறை:

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில் குடியிருப்புக்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்த ரோஷினிகுமாரி (6) என்ற சிறுமியை சிறுத்தை தாக்கி கவ்விச் சென்றது.

சிறுமியின் உடல் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டு, உடற்கூறாய்வுக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிலையில், சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset