நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மக்கள் கூடும் இடங்களில் தவெக கட்சியின் பேனர்கள் வைக்கக்கூடாது: புஸ்ஸி ஆனந்த் தகவல் 

சென்னை: 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் கண்ணியத்துடனும் கட்டுப்பாடுகளுடம் நடத்தப்படுவதை கட்சி உறுப்பினர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார். 

எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான பகுதிகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் வைக்கக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset