நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பெண்களை அதிகம் தாக்கும் ஓஸ்டியோபோரோஸிஸ்

லண்டன் : 

'ஓஸ்டியோபோரோஸிஸ்' எனப்படும் எலும்பு புரை நோயானது எலும்பை கொஞ்சம், கொஞ்சமாக உருக்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றோடு கழுத்து மற்றும் முதுகுவலியையும் ஏற்படுத்துகின்றது. மனித உடலில் உறுதியாக இருப்பதற்கு எலும்புகள் வலுவாக இருக்க வேண்டும்.

எலும்புகளின் அடர்த்தி குறைந்தாலோ, தேய்மானம் அடைந்தாலோ உடல் வலுவிழந்து விடும். 

இதனிடயே, 'ஓஸ்டியோபோரோஸிஸ்' நோய் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது. குறிப்பாக 40 வயதைக் கடந்த பெண்கள் மாதவிடாய் இறுதி நாட்களின்போது அதாவது 'மெனோபாஸ்' காலக்கட்டத்தில் இருக்கும் பெண்களையே இது அதிக அளவில் பாதிக்கின்றது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளைத் தெரிந்து கொண்டவுடன் உடனடியாக அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். 

மேலும், மாதவிலக்குப் சிக்கலுள்ள பெண்களுக்குக் கர்ப்பப்பையை நீக்கும்போது ஹார்மோன் சுரப்பிகள் சுரக்காமல் நின்று விடும். அப்போது பெண்களுக்கு இந்த எலும்பு புரை நோய் ஏற்படும்.

நம் அன்றாட வாழ்வில் எளிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் எலும்பு புரை நோயைக் கட்டுப்படுத்தலாம். அதிகாலை வெயில் உடலில் படும்படி இருந்தால், வைட்டமின் 'டி' சத்து உடலுக்கு கிடைக்கும். இதன் மூலம் செரிமான கோளாறு ஏற்படாது.

எலும்புகளுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். உடல் உழைப்பு இல்லாதவர்கள் நடைப்பயிற்சி செய்வது, தண்டால் எடுப்பது உள்ளிட்ட எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

அதுமட்டுமல்லாமல், பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். ராகி, கேப்பை உள்ளிட்ட கால்சியம் சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

எலும்பு புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் டாக்டர்களின் ஆலோசனைப்படி வைட்டமின் 'டி', கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset