செய்திகள் உலகம்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: ஹைதராபாத் பெண் உட்பட 8 பேர் பலி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஹைதராபாத் பெண் என்ஜினியர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலம் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
33 வயதான மவுரிஹொ ஹர்சியா (வயது 33) என்ற நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் வணிகவளாகத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்திய ஹர்சியாவை சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 8 பேரில் ஒருவர் இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் என்பது தெரியவந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சரோர்நகர் பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தடிகொண்டா (வயது 27).
இவர் டெக்சாசில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
ஐஸ்வர்யா உயிரிழந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என அவரது பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இண்டியா
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm