செய்திகள் உலகம்
சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டப்பட்டார்
லண்டன் :
இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இன்று இங்கிலாந்து மன்னராக அரியணையில்ல் அமர்ந்தார்.
மன்னர் 3-ஆம் சார்லஸின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மன்னர் சார்லஸும், அவரது இரண்டாவது மனைவி கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர், மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
700 ஆண்டுகள் பழமையான அரியணையின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லஸை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். இராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.
அதன்பின், மன்னர் 3-ஆம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பாற்றுவதாகக் கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், மூத்த மதகுருமார்கள் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மன்னர் சார்லஸூக்குச் செங்கோல் வழங்கப்பட்டு ஆர்ச் பிஷப் அவரது தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தைச் சூட்டி தங்க முலாம் பூசப்பட்ட அரியணயில் அமர வைத்தார்.
அவரது மனைவி கமீலா சார்லசுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. இந்தக் கிரீடம் 1953-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குச் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள், பன்னாட்டுப் பிரதிநிதிகள் லண்டன் பயணமாகியுள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 முக்கிய தலைவர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், மற்ற நாடுகளின் அரசக் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும், சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த விழாவில் அனைத்து மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.
விழாவையொட்டி லண்டன் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மலேசியாவிலிருந்து இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுடின் பில்லா ஷா, அரசியார் துங்கு அஜிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியா லண்டன் பயணமானது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am