நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு அமெரிக்கா காரணம்: ரஷியா குற்றச்சாட்டு

மாஸ்கோ: 

அதிபர் மாளிகையான கிரெம்ளினில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், கிரெம்ளின் மாளிகையில் நடத்தப்பட்டதைப் போன்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான முடிவுகள் அமெரிக்க அரசின் தலைமையமான வாஷிங்டனில்தான் எடுக்கப்படும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

அந்த முடிவை செயல்படுத்தும் வேலையைத்தான் உக்ரைன் செய்தது. கிரெம்ளின் மாளிகைத் தாக்குதலுக்கு அமெரிக்காதான் காரணம் என்பதை ரஷியா உணர்ந்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே, கிரெம்ளின் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷியா சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset