நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாநாட்டில் கொடியைப் பறித்த ரஷ்ய பிரதிநிதி தாக்கப்பட்டார்: வைரலாகும் காணொலி

அங்காரா :

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஓராண்டு கடந்தும் தொடர்ந்து நடந்து வருகின்றது. சிறிய நாடான உக்ரைன், பல்வேறு நாடுகளின் உதவி மற்றும் அமெரிக்காவின் இராணுவ உதவியுடனும் தொடர்ந்து போர் புரிந்து வருகிறது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகரித்து வரும் பரபரப்புக்கு மத்தியில் துருக்கியின் தலைநகரான அங்காராவில் நடந்த மாநாட்டின் போது, உக்ரைன் எம்.பி. ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷ்ய பிரதிநிதியைத் தாக்கியுள்ளார்.

இது குறித்த காணொலி வைரலாகியுள்ளது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பின் நாடாளுமன்ற சபையின் 61-வது பொதுச் சபையின் மாநாடு நேற்று நடைபெற்றது. 

பொருளாதார, தொழில்நுட்ப, சமூகம் என இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளைக் குறித்த விவாதிக்க மாநாடு நடத்தப்பட்டது. .இதில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிவ் போஸ்டின் சிறப்பு நிருபரும் அரசியல் ஆலோசகருமான ஜேசன் ஜே ஸ்மார்ட் இந்த வீடியோவைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

அந்தக் காணொலி வெள்ளிக்கிழமை காலை வரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டது. உக்ரைன் எம்.பி.மரிகோவ்ஸ்கியும் தனது முகநூலில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வக்கீல் இப்ராஹிம் சைடன் என்பவர் தனது ட்விட்டரில் "அவர் உண்மையிலேயே அந்த அடிக்கு தகுதியானவர். அங்காராவில் நடந்த கருங்கடல் பொருளாதார சமூக நிகழ்வில் ரஷ்யா பிரதிநிதி சண்டையிட்டு, எம்பி மரிகோவ்ஸ்கியின் கைகளில் இருந்து உக்ரைன் கொடியை வலுக்கட்டாயமாக பறித்தார் எனக் கூறியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset