நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களுக்கு  வெப்பம் அதிகமாக இருக்கும்

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மே மாதத்தின் முதல் 15 நாள்களில் மதிய நேரங்களில் வெப்பம் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று ஆய்வகம் குறிப்பிட்டது. 

சில நாள்களில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

சில நாள்கள் பிற்பகல் நேரங்களில் சிறு மழையை எதிர்பார்க்கலாம்,  ஒரு சில நாள்கள் மாலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  முதல் வாரத்தில் சில நாள்கள் காற்றுடன் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம். 

சிங்கப்பூரில் பொதுவாக ஏப்ரல் மாதம் வெப்பமாக இருக்கும் அதில் இந்தமுறையும் எ ந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 14ஆம் தேதி உட்லண்டஸ் வட்டாரத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset