நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரண்டு வாரத்தில் தேர்தல்: குழந்தை பெற்றெடுத்த தாய்லாந்து பிரதமர் வேட்பாளர்

பாங்காக்: 

தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் பாய்தோங்டார்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிள்ளை பிறந்ததை அவரின் கட்சி உறுதிசெய்துள்ளது.

வரும் 12ஆம் தேதி பேங்காக் நகரில் நடைபெறவிருக்கும் இறுதிப் பிரசாரத்தில் பாய்தோங்டார்ன் நிச்சயமாகக் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.

பிள்ளை பிறந்த செய்தியைத் பாய்தோங்டார்ன் Instagram பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

ஆண் பிள்ளைக்கு ப்ருத்தாசின் சூக்சாவாஸ் (Prutthasin Sooksawas) என்று பெயரிடப்பபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

பெரும் செல்வந்தரும் தாய்லாந்து முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவாட்டின் மகள் பாய்தோங்டார்ன்.

2006ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின்போது தக்சின் பதவியிழந்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க அவர் துபாயில் வசித்து வருகிறார். அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்கிறார்  தக்சின்.

பேரனைப் பார்க்கத் தாய்லாந்து திரும்பப்போவதாக அவர் தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.

பயணம் எப்போது என்பதை தக்சின் தெரிவிக்கவில்லை.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset