செய்திகள் உலகம்
நிலவில் ஜப்பான் தனியார் விண்கலம் நொறுங்கியது
டோக்கியோ:
நிலவில் தரையிறங்க முயன்ற ஜப்பானின் விண்கலமான ஹகுடோ-ஆர் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டு புதன்கிழமை விழுந்து நொறுங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஜப்பானின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்ட ஐஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் லேண்டரை உருவாக்கியது.
ஜப்பானின் ஹகுடோ-ஆர் லேண்டருடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் ரோவர் நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டது.
நான்கரை மாதப் பயணத்துக்குப் பிறகு உலகின் முதல் தனியார் லேண்டர் நேற்று தரையிறங்க இருப்பதாக ஜப்பான் தனியார் விண்வெளி நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், நிலவில் நேற்று தரையிறங்க முயன்ற ஜப்பானின் லூனார் லேண்டர் ஹகுடோ-ஆர் தொடர்பு 6 மணி நேரத்துக்கும் மேலாக துண்டிக்கப்பட்ட நிலையில், அது நிலவில் விழுந்து நொறுங்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஹகுடோ-ஆர் லேண்டர் நிலவில் தரையிறங்கும் சில நொடிகளுக்கு முன் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு லேண்டர் நிலவில் விழுந்து நொறுங்கிய ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தங்கள் ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கி உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am