செய்திகள் உலகம்
போதைப் பொருள் கடத்தல் வழக்கு; சிங்கப்பூர் தமிழர் தங்கராஜ் சுப்பையா தூக்கிலிடப்பட்டார்
சிங்கப்பூர்:
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா (வயது 46) சாங்கி சிறையில் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டார்.
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமலில் இருக்கின்றன.
உலக நாடுகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அந்த நாடு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.
கொரானாவுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்ற ஆரம்பித்ததால், பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கஞ்சா கடத்தியதாக சிங்கப்பூர் தமிழரான தங்கராஜ் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2018ஆம் ஆண்டில், 1 கிலோ கிராம் (2.2 பவுண்டுகள்) கஞ்சாவைக் கடத்த சதி செய்ததாக உயர் நீதிமன்றத்தால், தங்கராஜ் சுப்பையா குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு அவருக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதன் முறையாகும். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
இவரின் உறவினர்கள் சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.
தற்போது அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am